பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

Filed under: தமிழகம் |

பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொறியல் படிப்புக்கு விண்ணப்பம் பெற முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் குவிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று முதல் ஜூன் 6ம் தேதி வரை 2024-25ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. https://www.teneaonline.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆன்லைன் மூலமும், இ சேவை மையங்கள் மூலமும் மாணவர்கள் நேற்று விண்ணப்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் கால அவகாசம் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியல் படிப்புக்கு மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.