போராட்டம் செய்த முதலமைச்சர்; கர்நாடகாவில் பரபரப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

 

அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் திடீரென போராட்டம் நடத்தியதில் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மிகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஊழலில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சம்பந்தபடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சித்தராமையா திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்பட பலரும் கலந்து கொண்டு போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் முதலமைச்சருக்கு சம்பந்தம் இருப்பதாக கூறும் படி அதிகாரிகளை அமலாக்கத்துறை வற்புறுத்துவதாகவும் இதனால் போராட்டம் நடத்தி வருவதாகவும் டி கே சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.