போரை நிறுத்துமா இஸ்ரேல்?

Filed under: உலகம் |

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. தற்போது பணையக்கைதிகளை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸின் ஆதிக்கத்திலுள்ள காஸா முனை மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸாவில் உள்ள தேவாலயம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகளவில் கண்டனங்களை பெற்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் அழைத்து வரும் நிலையில் இஸ்ரேல் அதை புறக்கணித்து தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஹமாஸ் பிடித்து சென்ற பணையக்கைதிகளை எந்த நிபந்தனையுமின்றி ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது. முன்னதாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர் அல்லாத 4 பேரை விடுவித்திருந்தனர். தற்போது இஸ்ரேல் பெண் வீரர் ஒருவர் உட்பட 3 பேரை விடுவித்துள்ளனர். ஹமாஸ் இறங்கி வந்து பணையக்கைதிகள் சிலரை விடுவித்துள்ளது. இஸ்ரேலும் காசா மீதான தாக்குதலை குறைத்துக் கொண்டால் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.