மகாராஷ்டிராவில் அம்மை நோய்க்கு 2 பேர் பலி!

Filed under: இந்தியா |

அம்மை நோய்க்கு 126 குழந்தைகள் பாதிக்கப்பட்டதுடன், 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 126 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு பேர் அம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் தற்போது 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு பேருக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அதிக நெருக்கடி, விழிப்புணர்வு இல்லாமை, அம்மை நோய் தடுப்பூசி தடுப்பு ஊசி போட தயக்கம் ஆகியவைதான் அம்மை நோய் பரவ காரணம் என்று மத்திய சுகாதார குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.