மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

Filed under: இந்தியா |

பட்டாசு ஆலையில் எற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது.

மத்திய பிரேதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் தீப்பரவியதால் குடியிருப்புவாசிகள் பயத்தில் உள்ளனர். மேலும், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு, இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.