மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!

Filed under: இந்தியா |

மனைவி டிவி, பிரிட்ஜ் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்து கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியான மாநிலத்தின் குருகிராம் பகுதியை சேர்ந் 22 வயதான ராகுல், பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது சம்பளம் தினசரி செலவுகளுக்கே போதாத நிலையில் பிரியங்கா தனக்கு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்கள் வேண்டும் என அடிக்கடி சண்டை போட்டுள்ளார். சம்பவத்தன்று இருவருக்குமிடையே வாக்குவாதம் வலுவடைந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகுல், பிரியங்காவை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் இரவு முழுக்க தனது மனைவியின் பிணத்தோடு இருந்த அவர் என்ன செய்வதென்று யோசித்து காலையில் இரு சூட்கேசை வாங்கி வந்து அதில் மனைவியின் உடலை நிர்வாணமாக கிடத்தி மூடி ஒரு ஆட்டோவில் எடுத்து சென்று ஆள் நடமாட்டமில்லாத சவுக் பகுதியில் வீசியுள்ளார். ஆளரவமற்ற பகுதியில் சூட்கேசில் கிடந்த பிணம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ராகுலை பிடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.