மின்சாரத்துறை புகார்களுக்கு தீர்வு!

Filed under: அரசியல் |

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இதுவரையில் 11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணப்படும் மின்சாரம் தொடர்பாக புகார்களை 24×7 செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் பெறப்பட்டு, அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன. மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில், “11,88,043 புகார்களில் 99% புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. முதலமைச்சர் தளபதி @mkstalin ஆணைக்கிணங்க, 24×7 செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம்” என கூறியுள்ளார்.