மின் கட்டண உயர்வு மனு!

Filed under: தமிழகம் |

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பாக கொடுத்த மனுவை ஏற்றுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50ம், இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50ம், இரண்டு மாதங்களில் 501  -600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155ம், இரண்டு மாதங்களில் 601 – 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 கட்டணத்தை உயர்த்துவதற்கு பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மின் வாரியத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கணக்கில் எகிறியுள்ள கடன், மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை, மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி மத்திய அரசு தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம் போன்ற காரணங்களால் மின் கட்டணத்தை உயர்த்த காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பான மனுவை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது. விரைவில் மின்சார கட்டண விவரம் மின்வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும். கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை அளிக்க மின் நுகர்வோர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்களின் கருத்துகள் அனைத்தும் ஆகஸ்ட் 22ம் தேதிக்கு முன்னதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.