முதலமைச்சரின் இரண்டு அறிவுரைகள்?

Filed under: அரசியல்,தமிழகம் |

நேற்று ஓய்வு எடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அதற்கு முந்தைய நாள் கோட்டைக்கு சென்று சில முக்கிய ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளுடன் தமிழகத்தில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கிறதா? அதேபோல் மின்தடை ஏற்படாமல் கோடையை சமாளிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சில அறிவுரைகளையும் கூறிவிட்டு முதல்வர் கொடைக்கானல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி என்பதால் கோட்டைக்கு சென்று விட்டு வந்தால் நல்லது என தலைமைக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தியதை அடுத்து அவர் கோட்டைக்கு சென்றதாகவும் சில ஆலோசனை கூட்டங்களையும் நடத்திவிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. கொடைக்கானலிலிருந்து முதலமைச்சர் மே 5ம் தேதி சென்னை திரும்ப இருக்கிறார்.