முதலமைச்சர் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பது எங்கே?

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகம் முழுதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தார். தற்போது அவர் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் சென்றிருப்பதாக தகவல் வெளியானது.

முதல் கட்டமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இத்தகவலை திமுக மறுத்துள்ளது. இதனை அடுத்து தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அவர் ஏப்ரல் 29ம் தேதி கொடைக்கானல் சென்று மே 4ம் தேதி வரை அங்கு ஓய்வெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இடிமயடுத்து கொடைக்கானலில் செல்லும் வழியில் உள்ள வத்தலகுண்டு உள்பட ஒரு சில பகுதிகளில் சாலைகளை செப்பனிடும் பணி நடந்து வருவதாகவும் கொடைக்கானலில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மே 4ம் தேதி வரை ஓய்வெடுக்கும் முதலமைச்சர் சாலை அதன்பின் சென்னை திரும்பி தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் அதன் பின் வட இந்தியாவில் இந்தியா கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.