முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிஆர் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோக்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிதியமைச்சர் முதல்வரை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.