முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 23) மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்து விட்டனர். இந்த செய்தியை கேட்டவுடன் மிகவும் வேதனையான இருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.