ராஜீவ் நினைவிடம் செல்லும் ராகுல்!

Filed under: அரசியல் |

முதன் முறையாக தன் தந்தையான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு செல்லவுள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் ‘இந்திய காங்கிரஸ் பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை யாத்திரை நாளை தொடங்கப்படவுள்ளது. நடைபயண யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது. இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி மற்றும் 118 பேருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ குழுவும் தயாராக உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பின்னர் மாலை 3.30 தொடங்கி இரவு 7 மணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்படும். ஒரு நாளைக்கு 22 முதல் 26 கிலோமீட்டர் வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடை பயணம் செல்லும் மாநிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாடவும், கலை நிகழ்ச்சிகளுக்கும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. நாளை காலை 6.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திற்கு முதன் முறையாக ராகுல் செல்கிறார். அங்கு தன் தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.