டில்லிக்கு கொண்டு வரப்பட்ட செங்கோல்!

நாளை புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்காக செங்கோல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கியது. இது நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளது” என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நேற்று திருவாடுதுறை ஆதினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படவ-ள்ள செங்கோல் இன்று டில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் முக்கூடலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. டில்லிக்கு கொண்டு வரப்பட்ட பின் செங்கோல் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.