ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Filed under: இந்தியா,தமிழகம் |

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 6.5% வட்டி விகிதம் என்படு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை ரெப்போ வங்கி வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் “ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வங்கி வட்டி விகிதம் எந்தவித மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று அறிவித்துள்ளது. உலகப் பொருளாதாரம், தொடர்ந்து கலவையான தோற்றத்தையே வழங்கி வருவதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன் ரெப்போ விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. 2022ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4.5 சதவீதம் என்று இருந்தது. தற்போது 6.5 என உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இம்மாதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.