‘லியோ’ தெலுங்கு பதிப்பை வெளியிட தடை!

Filed under: இந்தியா,சினிமா |

நடிகர் விஜய்யின் திரைப்படமான “லியோ”விற்கு தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜய் நடித்த “லியோ” திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். “லியோ” டிரெயிலரின்போது ரசிகர்கள் தியேட்டரை சேதப்படுத்தியது, “லியோ” திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா ரத்து, அதிகாலை காட்சி ரத்து என பல தடைகளை சந்தித்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து. டி என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தெலுங்கானா நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழு மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.