வலுவிழக்கும் ‘குலாப்’ புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 27:
‘மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ‘குலாப்’ புயல், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு விழுந்தன.

பின், இந்த புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 6 மணி நேரமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.