வள்ளலார் மையம் விரிவான அறிக்கை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Filed under: தமிழகம் |

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சத்தியஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற ஏழு நிறுவனங்களும் தகுதியான நிறுவனங்கள் என்று தேர்வு செய்யப்பட்டது. அதன் பின் மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு வள்ளலார் சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும் சர்வதேச மையம் அமைத்தாலும் அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம் இருக்கும். அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வந்தால் வசதிகள் அமைத்து கொடுக்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் இவ்வழக்கை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.