விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு?

Filed under: அரசியல்,தமிழகம் |

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜூன் 14ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து வேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்புமனு வாபஸ் ஆகிய நடவடிக்கைகள் முடிவடைந்து ஜூலை 10ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.