வினோத ஹெல்மெட் அணிந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Filed under: தமிழகம் |

இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி பொதுமக்கள் அச்சுறுத்தியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர். தென்காசியிலுள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக வகையில், ஹெல்மெட் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்ற சுஜித் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.