விஷச்சாராயம் அருந்தியவர்களின் நிலை குறித்து கலெக்டர் தகவல்!

Filed under: தமிழகம் |

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 140 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள், 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம். மேலும் அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.