வெள்ள பாதிப்புக்குள்ளான வல்லுனர்கள் கருத்து!

Filed under: சென்னை |

வல்லுனர்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ டிரோன்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்,

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடந்தாண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு ஆகியவற்றில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மனிதர்களால் செல்ல முடியாத பகுதிக்கு டிரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது டிரோன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் உணவு போன்ற பொருட்களை அளித்திருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது டிரோன்கள் வழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போது டிரோன்கள் பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு டிரோன்களை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்களை வழங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்,