ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி!

Filed under: சினிமா |

கடந்த 2013ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான “கலகலப்பு” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை.

இப்போது “அரண்மனை 4” எடுத்து ரிலீஸ் செய்து அந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அடுத்து அவர் கலகலப்பு 3ம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஏற்கனவே எடுத்த கலகலப்பு இரண்டாம் பாகம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.