ஹேப்பி ஸ்ட்ரீட் குறித்து தமிழிசை சௌந்திரராஜன்

Filed under: அரசியல்,புதுச்சேரி |

சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது சமீபத்தில் புதுவையிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றைக்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் நடக்கும் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறிவிடக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே நடிகர் ரஞ்சித் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.