14வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவன்!

Filed under: இந்தியா |

ஆசிரியர் திட்டியதால் கர்நாடக மாநிலத்தில் 14வது மாடியிலிருந்து மாணவன் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வரும் மோஹின் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பிட் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆசிரியரிடம் பிடிப்பட்ட அவரை ஆசிரியர் கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளார். அன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைவில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து செய்து வருகின்றனர்.