14 ஆயிரம் அடி உயரம்: இந்தியா கொடியை பறக்கவிட்ட இந்தோ திபெத் காவல் படையினர்!

Filed under: இந்தியா |

இன்று சுதந்திர தினம் என்பதால் கடல் மட்டத்தில் 14,000 அடி உயரத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் இந்திய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இன்று நாடு முழுவதும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றினர்.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களில் அரசியல் தலைவர்கள், மாநில அரசு, காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் என பலரும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

தற்போது இந்திய திபெத்திய எல்லைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் காவல் படையினர் சுதந்திர தினத்தை கொண்டாடினார். இதன் பின் வீரர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தி அணிவகுப்பு செய்து பாங்காங்சோ ஏறியின் கரையில் இந்திய கொடியை ஏற்றினார்.