17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்!

Filed under: தமிழகம் |

நேற்று பல பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் 17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. மீண்டும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். நேற்று ஒருநாளில் மட்டும் தடுப்பூசி முகாம்கள் மூலமாக 17,55,364 பேருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.