2 மாதக்குழந்தை பலி!

Filed under: தமிழகம் |

ஒரே நாளில் பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு மூன்று தடுப்பூசிகள் போட்டதால் அக்குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சுகன்யா தம்பதியருக்கு கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. குழந்தை பிறந்தவுடன் 45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசியை பெற்றோர் போடாமல் இருந்ததால் 52வது நாளில் ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தையின் மூக்கிலும், வாயிலும் திடீரென ரத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஒரே நாளில் மூன்று தடுப்பு ஊசி போட்டதால்தான் குழந்தை உயிரிழந்தது என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.