25 சிலிண்டர், ரூ. 1 லட்சத்து பத்தாயிரம் திருடிய ஓட்டுநர் கைது.

Filed under: தமிழகம் |

25 சிலிண்டர், ரூ. 1 லட்சத்து பத்தாயிரம் திருடிய ஓட்டுநர் கைது.

மதுரை மாவட்டம் திருப்பாலையில், கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார் ரமேஷ். சத்திரப்பட்டியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் கேஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், கலெக்சன் தொகையான 1 லட்சத்து 10 ஆயிரத்தை கையாடல் செய்த சக்தி முருகன், 25 சிலிண்டர்களையும் திருடி விற்றுள்ளார். இது குறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் சக்தி முருகனை திருப்பாலை போலீசார் நேற்று கைது செய்தனர்.