50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Filed under: தமிழகம் |

சென்னையை சேர்ந்த பயணி மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்‌ தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டில்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் (42) ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் பின் தொடர்ந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கி பிடித்து இரண்டு போக்கையும் சோதனை செய்ததில் அதில் போதைபொருள் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. உடனே(DIR) DIRECTOR REVENUE INTELLGENGE அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில் நிலைய காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு 50 கோடி ரூபாய் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.