1972 ல் வேலூரில் பயிற்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி.

Filed under: தமிழகம் |

1972 ல் வேலூரில் பயிற்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி.

வேலூரில் 1972-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற நேரடி முதல் நிலை காவலர்கள் 52-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது .நலச்சங்க இணைச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். நல சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார் .சங்க அமைப்புச் செயலாளர் சேதுராமன், நல சங்க செயலாளர் ஹரி பாபு,நலச்சங்க இணைச் செயலாளர் தாண்டவன், ஆலோசகர்கள் சொக்கையன், பிச்சை பிள்ளை, நலச்சங்க இணைச் செயலாளர் கலியமூர்த்தி, வேலூர் ஜெயகிருஷ்ணன், திருச்சி செல்வத்துரை, தஞ்சாவூர் சண்முகம், திருச்சி தீனதயாளன், தஞ்சாவூர் பாண்டியன், தஞ்சாவூர் பால தண்டாயுதபாணி, மீள் கூடல் அமைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நல சங்க பொருளாளர் நெல்சன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

மீள் கூடல் அமைப்பாளர் கண்ணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மீள்கூடல் அமைப்பாளர் காசிநாதன் நன்றி கூறினார் .விழாவில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.