7 பேருக்கு மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான்!

Filed under: இந்தியா,தமிழகம் |

புதிய வகை ஒமிக்ரான் மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நிலையில், வேறுபட்ட நிலையில் தொடர்ந்து பரவி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் 7 பேருக்கு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் 4 பேருக்கு பி.ஏ.4 வகை ஒமிக்ரானும், 3 பேருக்கு பி.ஏ.5 வகை ஒமிக்ரானும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த புதிய வகை பாதிப்பு உள்ளவர்களில் 3 பேர் கேரளா, கர்நாடகாவுக்கு சில நாட்கள் முன்னதாக பயணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.