வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், இரவில் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.
Related posts:
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு.
கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு முன்னதாகவே சென்றடைந்தார் விஜய்
முத்தூட் பைனான்சில் திருடிய.. கொள்ளையர்களை 18மணி நேரத்தில்.. கைது செய்த போலீசார்.. !!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!