திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளது.

திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், ஜுன் 2 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வந்ததால் அவரது உடல்நிலை மோசமானது.

இதனால் முதல் இரண்டு நாட்கள் வெண்ட்டிலேட்டர் மூலமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இரு நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக அவருக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாச அளவுக் குறைக்கப்பட்டு 29 சதவீதம் மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் அவர் உடல்நிலை மோசமானது.

இதையடுத்து இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெ அன்பழகனின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருப்பதாக கூறியுள்ளது.