மதுரை சமூக சேவகிக்கு “அறம்” விருது வழங்கினார் நடிகர் பாக்யராஜ்.
மதுரை சமூக சேவகி வனிதா ரவி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஆதரவற்ற முதியவர்களுக்கு அரிசி, புத்தாடைகள், இனிப்பு போன்றவற்றை வழங்கி வருகிறார். மேலும் மதுரையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி, நேற்று முன்தினம் நடைபெற்ற அறம் விருதுகள் 2024 நிகழ்ச்சியில், நடிகர் பாக்யராஜ் “சிறந்த சமூக சேவைக்கான அறம் விருது” வழங்கி கௌரவித்தார்.