Home » Entries posted by Shankar U (Page 106)
Entries posted by Shankar

பொன்முடி மகனுக்கு சீட் இல்லையா?

Comments Off on பொன்முடி மகனுக்கு சீட் இல்லையா?

பொன்முடி மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அவ்வகையில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. […]

Continue reading …

தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி தெரிவித்த ஆ.ராசா!

Comments Off on தொகுதி உடன்பாட்டில் அதிருப்தி தெரிவித்த ஆ.ராசா!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நீலகிரி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை போட்டியிடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆ.ராசா, நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வேன் என்றும் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ. ராசா போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டு அவர் […]

Continue reading …

திமுக விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

Comments Off on திமுக விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

திமுகவினர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப மனுக்களை, மார்ச் 1ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு […]

Continue reading …

அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர்!

Comments Off on அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர்!

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து வரவேற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மகள் சிம்லா முத்து […]

Continue reading …

புதுச்சேரியில் சிறுமியின் உடல் அடக்கம்!

Comments Off on புதுச்சேரியில் சிறுமியின் உடல் அடக்கம்!

9 வயது சிறுமி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.அவரது உடல், பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. 9 வயது சிறுமி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கொலை வழக்கில் முதியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமி கொலை வழக்கு விவகாரத்தில், சிறப்பு குழு […]

Continue reading …

தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

Comments Off on தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பின் நிலவரம் என்ன?

இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் அதேபோல் 100 தொகுதிகளையும் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் […]

Continue reading …

மார்ச் 22-ல் மீண்டும் மோடி தமிழகம் வருகை!

Comments Off on மார்ச் 22-ல் மீண்டும் மோடி தமிழகம் வருகை!

மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். தென்மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் […]

Continue reading …

மதிமுகவுக்கு திமுக சீட் ஒதுக்கியது எத்தனை?

Comments Off on மதிமுகவுக்கு திமுக சீட் ஒதுக்கியது எத்தனை?

திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திமுக மதிமுக இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் […]

Continue reading …

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

Comments Off on ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

திடீரென நேற்றிரவு சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதால் உலகம் முழுதும் உள்ள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர். டுவிட்டர் உள்ளிட்ட மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. மார்க் அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் திடீரென ஏன் முடங்கியது. சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரு மணி […]

Continue reading …

விஜய்யின் படத்தில் பாடல் கங்கை அமரன் எழுதியுள்ளாரா?

Comments Off on விஜய்யின் படத்தில் பாடல் கங்கை அமரன் எழுதியுள்ளாரா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது ஜிலீமீ நிக்ஷீமீணீtமீst ளியீ கிறீறீ ஜிவீனீமீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு படம் குறித்து பேசும்போது, “இந்த மாத இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி […]

Continue reading …