
மலையாள திரைப்படமான “மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை இத்திரைப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். திரைப்படத்தின் ஒரு முக்கியமான இடத்தில் “குணா” படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடல்” […]
Continue reading …
சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்த அஸ்விணி, கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அஸ்வினி அளித்த அடிப்படையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த அழகேசன், […]
Continue reading …
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே வாசன், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமாக நீடிக்கிறது. எங்கள் கட்சி சார்பில் தேர்தல் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும், பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். தேசப்பற்று உடைய கட்சிகள் பாஜக […]
Continue reading …
பிரமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தபோது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த போது ராஜ்பவனில் மோடி -மம்தா சந்திப்பு நடந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி “பிரதமர் முன் தலை வணங்க மம்தா வந்திருக்கிறார், பிரதமரை மகிழ்விக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார், அவர் என்ன செய்தாலும் மோடி யாரையும் கொள்ளையடிக்க […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடி கால் நகத்தின் தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை என்று பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு அண்ணாமலையிடம் பதிலளிக்கையில், “உதயநிதி என்பவர் யார்? அவருடைய தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் எடுத்துவிட்டு பார்த்தால் அவரால் இரண்டு ஓட்டுகள் கூட வாங்க முடியாது. தாத்தா அப்பா சம்பாதித்த பணத்தில் திரைக்கு வந்த ஒரு தோல்வியடைந்த நடிகர், தாத்தா அப்பா பெயரை […]
Continue reading …
கங்கனா ரனாவத் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா. ஆனால் அவர் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. அந்தளவுக்கு கங்கனா மேல் ரசிகர்களுக்கு வெறுப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே போல அவர் தமிழில் நடித்த “சந்திரமுகி 2” […]
Continue reading …
“இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தை அமீர் இயக்கி வருகிறார். இப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இப்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் திமுகவிலும் அயலக அணியில் பொறுப்பில் இருந்துள்ளார். ஜாஃபர் சாதிக்குடன் இணைந்து காஃபி ஷாப் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்த இயக்குனர் அமீர் மீது இது சம்மந்தமாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் விளக்க அறிக்கையையும் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இப்போது […]
Continue reading …
நடிகர் பிரஷாந்த் வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். 90களில் தமிழ் சினிமாவில் முன்னியாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட பிரஷாந்த் நடித்த “ஜீன்ஸ்,” “செம்பருத்தி,” “மஜ்னு” என பல திரைப்படங்களும் ஹிட்டானது. ஆனால் அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டது. கம் பேக் கொடுக்கும் வகையில் இந்தியில் “ஆயுஷ்மான் குரானா” நடித்து ஹிட் அடித்த அந்தாதுன் படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் […]
Continue reading …
ஈவு இருக்கமின்றி கண்மூடித்தனமாக தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலியர்கள் […]
Continue reading …
இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உட்பட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “அச்சமின்றி தேர்வு எழுதுங்கள். இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]
Continue reading …