
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் மற்றும் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். தற்போது அதிமுகவின் இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் திடீரென கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி […]
Continue reading …
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர், “தமிழகத்தில் தான் அதிக அளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி […]
Continue reading …
இன்று அரசு பள்ளிகளில் 2024 – 25 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளை சேர்க்க பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நேரடியாகவும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் நேரடியாக […]
Continue reading …
சமூக வலைதளங்களில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின் போது அடித்து விட்டதாக நடிகை ஒருவர் பேட்டி அளித்ததாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அதற்கு அந்த நடிகை தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். மமீதா பைஜூ ‘வணங்கான்’ படத்தில் நடித்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின்போது அடித்ததாக கூறியதாக செய்திகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. தற்போது நடிகை மமீதா […]
Continue reading …
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது அரசியல் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக குறிப்பாக அதிமுக மற்றும் திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்க வரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் தொகுதியில் பிரபலங்கள் போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று 50 பேர்கள் வரை விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். அதேபோல் அமைச்சர் கே என் […]
Continue reading …
இன்று சசிகலா வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். சமீபத்தில் சசிகலா புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா […]
Continue reading …
சென்னையை சேர்ந்த பயணி மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டில்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை […]
Continue reading …
உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நாக்பூர் அருகே சாலையோர டீக்கடையில் டீ குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த டீக்கடைக்காரர் பில்கேட்ஸ் யார் என்றே தெரியாமல் அவருக்கு டீ வழங்கினாராம். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது நாக்பூர் சாலையோர டீக்கடை அருகே திடீரென காரை […]
Continue reading …
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2024ம் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாதம் 18ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கை […]
Continue reading …
திடீரென சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து இருபத்தி இரண்டு மணி நேரம் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை செய்து வந்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் வந்தது. அச்செய்தி சேனல் தரப்பிலிருந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். […]
Continue reading …