Home » Entries posted by Shankar U (Page 153)
Entries posted by Shankar

சல்மான் கானுக்கு ஜோடியாகும் திரிஷா!

Comments Off on சல்மான் கானுக்கு ஜோடியாகும் திரிஷா!

நடிகை திரிஷா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நடிகை திரிஷா சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் 1,” “பொன்னியின் செல்வன் 2,” “லியோ” ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. நடிகர் அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளார். […]

Continue reading …

ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

Comments Off on ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

இதுவரை ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானின் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி […]

Continue reading …

காங்கிரஸ் முடிவால் இந்தியா கூட்டணி அதிர்ச்சி!

Comments Off on காங்கிரஸ் முடிவால் இந்தியா கூட்டணி அதிர்ச்சி!

பாஜக கூட்டணியை இவ்வாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 25 அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே 375 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 175 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா […]

Continue reading …

பிரதமர் மோடி பெருமிதம்!

Comments Off on பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்வதாக பேசினார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இவ்வாண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது, பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர். […]

Continue reading …

பிரதமர் மோடி கூடுதல் நிதி பற்றி தகவல்!

Comments Off on பிரதமர் மோடி கூடுதல் நிதி பற்றி தகவல்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 2.5 மடங்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முந்தைய காலங்களை விட தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்” […]

Continue reading …

லட்சக்கணக்கில் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை!

Comments Off on லட்சக்கணக்கில் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை!

வாட்ஸ் அப் நிர்வாகம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெசேஜ்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வு மட்டும் இன்றி பண பரிவர்த்தனை வசதியும் தற்போது இதில் உள்ளது. அதேபோல் ஆடியோ கால் வீடியோ கால் வசதியும் உள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு […]

Continue reading …

ஆன்லைன் பரிவர்த்தனைக்கு புதிய நிபந்தனைகள்!

Comments Off on ஆன்லைன் பரிவர்த்தனைக்கு புதிய நிபந்தனைகள்!

ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும் இந்தியாவில் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி அதற்கேற்றவாறு புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டில் நடைபெற்ற பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தது. இதற்காக கூகிள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற பல பரிவர்த்தனை செயலிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் இதை சரியாக கையாள தெரியாத நபர்களிடம் சில மோசடி கும்பல் எளிதில் பணத்தை திருடிவிடும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது. யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை ஒழுங்குப்படுத்த நேற்று முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ […]

Continue reading …

வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் அரபிக் கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. தென்கிழக்கு அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளது. இதையடுத்து லட்சத்தீவு, அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் எனவே இந்த பகுதிகளுக்கு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய […]

Continue reading …

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரஜினிகாந்த்துக்கு அழைப்பு!

Comments Off on ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரஜினிகாந்த்துக்கு அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். ராமருக்காக உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணி நடந்து வந்தது. அதன் கட்டுமான பணிகள் தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது. அதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகளும், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றது. அயோத்தி, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு […]

Continue reading …

காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Comments Off on காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தமிழக அரசு 19 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தோடு, 7 பேர் டிஐஜி பதவியிலும் 10 பேர் எஸ்பி பதவிகளும் நியமனம் செய்துள்ளது. நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் குமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐஜி பதவியில் இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் வி.ஜெயா, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய […]

Continue reading …