Home » Entries posted by Shankar U (Page 164)
Entries posted by Shankar

பேரிடரில் சிக்கியிருக்கிறது தமிழகம்; மாரி செல்வராஜ்

Comments Off on பேரிடரில் சிக்கியிருக்கிறது தமிழகம்; மாரி செல்வராஜ்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக […]

Continue reading …

அந்தரத்தில் தொங்கும் தூத்துக்குடி தண்டவாளம்!

Comments Off on அந்தரத்தில் தொங்கும் தூத்துக்குடி தண்டவாளம்!

கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் தாதன் குளத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் ரயில் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தண்டவாளத்தில் சில பகுதிகள் அந்தரத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும். ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வரலாறு காணாத மழையால் நெல்லை அருகே கங்கை கொண்டான் – தாழையூத்து இடையிலான ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது. வரலாறு காணாத […]

Continue reading …

பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!

Comments Off on பாளையங்கோட்டை கனமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் 1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது என பேட்டியளித்துள்ளார். தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை குறித்து செய்தியாளர்களிடம் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, ஆனால் அதே நேரத்தில் இது மேகவெடிப்பு அல்ல. 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் […]

Continue reading …

காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

Comments Off on காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

நடிகையும் பாஜக எதிர்பாளருமான காயத்ரி ரகுராம் தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில் காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “காசி தமிழ்ச் சங்கத் திட்டத்திற்கும், பொதுக்கூட்டத்துக்கும் எத்தனை கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது, இப்போது தமிழ்நாடு தென்பகுதி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரண நிதிக்கு 5060 கோடி கேட்டும், மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இப்போது தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலியில் இவ்வளவு சேதம், மத்திய அரசு ஆதரிக்குமா? உ.பி.க்கான 19000 கோடி திட்டத்தை பிரதமர் மோடி ஊக்குவித்து […]

Continue reading …

தென்மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

Comments Off on தென்மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும் நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் நெல்லை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று […]

Continue reading …

‘சலார்’ பட 2வது டிரைலர் ரிலீஸ்!

Comments Off on ‘சலார்’ பட 2வது டிரைலர் ரிலீஸ்!

இன்று நடிகர் பிரபாஸின் “சலார்” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெயிலர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, […]

Continue reading …

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

ஏஆர் ரகுமான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லால் சலாம்.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் இத்திரைப்படம் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சற்றுமுன் இப்படத்தில் இடம்பெற்ற ‘தேர்த்திருவிழா’ என்ற பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சங்கர் மகாதேவன், ஏஆர் […]

Continue reading …

ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Comments Off on ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

இன்று ஒரே நாளில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் சமீபத்தில் இருவர் புகுந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் […]

Continue reading …

சிறப்பு குழு பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

Comments Off on சிறப்பு குழு பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

இன்று தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, “மின்தடை சம்பந்தமான புகார்களை 24ஙீ7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் […]

Continue reading …