
நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் “ஜப்பான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். இத்திரைப்படம் கார்த்தியின் 25வது படம். இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டனர். இயக்குனர் அமீர் கார்த்தியின் முதல் திரைப்படத்தை இயக்கியவர். ஆனால் இவ்விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் சமூகதளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். “பருத்திவீரன்” ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு […]
Continue reading …
கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள வீரபத்ர நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தீயை அணைக்கும் முயற்சிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Continue reading …
பாகிஸ்தான் அணி 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் நேற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார். அதில் “இன்று சங்கடமாக இருந்தது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280-ஐ எட்டுவது மிகவும் பெரிய விஷயம். ஈரமான பிட்ச் இல்லை. பாக் வீரர்களின் பீல்டிங், உடற்தகுதி நிலைகளைப் பாருங்கள். கடந்த […]
Continue reading …
இந்தியாவில் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் இனி டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்கான காரணத்தை இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்திய தொலைக்காட்சி சந்தையில் அதிகரித்து வரும் போட்டி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2019 மற்றும் 2020ல் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் இந்திய தொலைக்காட்சி சந்தையில் நுழைந்தன. ஆனால் அவர்களால் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியவில்லை. இந்திய தொலைக்காட்சி சந்தையில் Samsung, LG மற்றும் […]
Continue reading …
விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் புஸ்சி ஆனந்த் ‘தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் சில மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை கொட்டப் போவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]
Continue reading …
ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5675.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 45400.00 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6145.00 எனவும் […]
Continue reading …
சென்னை ஆவடி அருகே புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதை அடுத்து வந்தே பாரத், பெங்களூர் டபுள் டக்கர் உள்பட பல ரயில்கள் தாமதமாக கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. திடீரென சென்னை ஆவடி புறநகர் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. சென்னை அண்ணனூர் பணி மணியிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதாகவும் ரயில் ஓட்டுனர் துவங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளது. விஜயதசமி தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். அவ்வகையில் இவ்வாண்டு விஜயதசமி தினத்தன்று அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதை அடுத்து […]
Continue reading …
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அரசியல் நாகரீகம் என்று பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறியது முழுக்க முழுக்க பொய். 29 மாத ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க அரசு அறிவிக்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை. இனியாவது […]
Continue reading …