
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் நம் மாணவர்கள் பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் பலவும் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றது. மத்திய பாஜக அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் […]
Continue reading …
இன்று இணையத்தில் பிரபலமான அஸ்வினியை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அஸ்வினி சென்னையடுத்துள்ள மகாகபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் வசித்து வருபவர். இவர் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றபோது கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் புகாரளித்திருந்தார். இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு அப்பெண்ணுடனுடனும் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தோருடன் அமர்ந்து சாப்பிட்டார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது, அஸ்வினியின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நலத்திட்டம் வழங்கி அவர் வீட்டில் சாப்பிட்டார். அதன்பின், இவர் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘அதிமுக மாநாடு நடக்கவுள்ளதால், இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 20ம் தேதி நீட் எதிர்ப்பு போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது’ என்று விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின் மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறும் இம்மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் “ஜெயிலர்” காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்த அமைச்சர் முன்னாள் அமைச்சர் […]
Continue reading …
ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வெகு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள ஹவாய் தீவு அருகேயுள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இத்தீ அங்குள்ள நகருக்குள் பரவியது. இதில், அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் எரிந்து சேதம் அடைந்தன. பலர் கடலில் குதித்து உயிர்தப்பினர். இந்த தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தென்மேற்கு பருவமழையை விட ஆறு சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூர் பகுதியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை தென்மேற்கு பருவமழை இயல்பை விட ஆறு சதவீதம் அதிகம் பெய்துள்ளது. மேலும் சென்னை […]
Continue reading …
கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் “ஜாதியை கூட மன்னித்து விடலாம் ஆனால் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார். நாங்குநேரியில் சமீபத்தில் பட்டியலின மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது […]
Continue reading …
மிக நூதனமாக முறையில் வெளியே பேன்சி ஸ்டோர் வைத்து உள்ளே கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் பேன்சி ஸ்டோர் இயங்கி வருகிறது. கடையில் வேலை செய்யும் அண்ணாதுரை கோழி வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு சற்று வித்தியாசமாக இருந்ததையடுத்து கோழிக்கடைக்காரர் சந்தேகமடைந்து காவல்துறையினர்களிடம் அவரை பிடித்து கொடுத்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோதுதான் பேன்சி ஸ்டோரில் கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு தனி […]
Continue reading …
நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. திருமண தேதி குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. நடிகர் அசோக் சொல்லன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தை அருண்பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண தேதி மற்றும் பிற விபரங்கள் அதிகாரபூர்வமாக […]
Continue reading …
சென்னைக்கு ஆந்திராவிலிருந்து வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து பயணிகளிடம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் வந்த இரண்டு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா பகுதியில் திடீரென கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் நகைகளை பறித்து சென்றதாக தெரிகிறது. பயணிகள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும், “நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை […]
Continue reading …