
‘ஜவான்’ படத்தின் 2 வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத். பாலிவுட்டிற்கு நுழையும் அனிருத்தின் முதல் படம் ‘ஜவான்’ படம். இதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கில் […]
Continue reading …
மங்கோலிய அதிபர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9 மணிக்கு வெளியான இப்படம், […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “77-வது விடுதலை நாள் விழாவினையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று. நாம் இந்தியத் திருநாட்டின் 77-வது […]
Continue reading …
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு, சனி ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறையை அடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து துறை ஏற்கனவே 2,100 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்ற நிலையில் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் மொத்தம் உள்ள 2643 பேருந்துகளில் 1,32,150 பேர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக […]
Continue reading …
நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வரிசையாக “தர்பார்” மற்றும் “அண்ணாத்த” ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது “ஜெயிலர்.” “பீஸ்ட்” தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது. இரண்டு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு […]
Continue reading …
கவர்னர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், “ஒரு பெற்றோராக நீட் தேர்வு தடை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்” என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது “நீட் தேர்வுக்கு ஒருபோதும் நான் தடை கொடுக்க மாட்டேன். நமது குழந்தைகளை கஷ்டத்திற்கு ஆழ்த்த நான் விரும்பவில்லை. நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரையை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் […]
Continue reading …
கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ராஜசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக விஜய மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை […]
Continue reading …
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக […]
Continue reading …
மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் நடிகர் சிவராஜ்குமார். இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார். 100க்கும் மேற்பட்ட படங்களில் கன்னட மொழியில் நடித்துள்ளார். இப்போது அவர் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவிலும் “ஜெயிலர்” திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார். அதில் “ரசிகர்கள் […]
Continue reading …