
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபாஸின் ரசிகர்கள் “புராஜக்ட் கே” திரைப்படத்திற்காக வித்தியாசமான முயற்சி மேற்கொண்டனர். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் தெலுங்கு நடிகர் பிரபாஸின் அடுத்த படம் “புராஜக்ட் கே.” மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” திரைப்படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் […]
Continue reading …
ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியவர். இவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கடலுக்குள் மூழ்கியது. இக்கப்பல் மூழ்கிய ஆழ்கடலுக்குள் சென்று இதன் பாகங்களைக் காண்பது பலருக்கு திரிலிங்கான பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. இதற்காக சமீபத்தில் ளிநீமீணீஸீநிணீtமீ என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் […]
Continue reading …
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அட்லியின் இணை இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அட்லி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் […]
Continue reading …
கென்யா நாட்டில் மத போதகர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம் என்று கூறியதையடுத்து உண்ணாவிரதம் இருந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கென்யா நாட்டிலுள்ள மாலண்டி கடற்கரை நகரத்தில் தேவாலயம் இயங்கி வருகிறது. இங்குள்ள மத போதகர் பால் மெக்கன்சி என்பவர் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தால் இயேசுவை சந்திக்கலாம் என்று கூறியதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக உயிரிழந்துள்ளனர். இது […]
Continue reading …
பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா […]
Continue reading …
“மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது. ரிலீசான இத்திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலில் இத்திரைப்படம் சோடை போகவில்லை என தெரிகிறது. முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரிலீசாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் சமீபத்தைய படமான “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்பார்ப்போடு தெலுங்கில் ரிலீசாகி தோல்வி அடைந்தது. இப்போது “மாவீர்டு” திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் தெலுங்கை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து […]
Continue reading …
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானதில் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை. கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். “நாயகன்” திரைப்படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து […]
Continue reading …
முதல் முறையாக வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போபாலிலிருந்து டில்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ரயிலுள்ள பேட்டரியில் ஏற்பட்ட தீ, ரயிலில் பரவியதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரயில் […]
Continue reading …
இன்று காலை முதல் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்று தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் கடந்த 2011ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது, அமலாக்க துறையை அதிகாரிகளின் சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]
Continue reading …