Home » Entries posted by Shankar U (Page 349)
Entries posted by Shankar

காங்கிரஸ் தலைவரின் கேள்வி!

Comments Off on காங்கிரஸ் தலைவரின் கேள்வி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி 2வது முறையாக பதவியேற்றார். பிரதமர் மோடியின் […]

Continue reading …

நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Comments Off on நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நான்காவது நாளாக முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள அளிக்கவில்லை என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து வருகின்றன. இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் […]

Continue reading …

பாஜக தனது ஆதரவை அறிவித்தது!

Comments Off on பாஜக தனது ஆதரவை அறிவித்தது!

பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதரவு யாருக்கு என்பது குறித்த அறிக்கையை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்தது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் இருவரில் […]

Continue reading …

கல்வி இயக்குனரின் உத்தரவு

Comments Off on கல்வி இயக்குனரின் உத்தரவு

கல்லூரி கல்வி இயக்குனர் முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு மட்டும் சனிக்கிழமையும் வகுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 2022 – 2023ம் ஆண்டின் கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தாமதமானதால் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கட்டாயம் வகுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2023ம் ஆண்டு மே ஒன்றாம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதலாமாண்டு மாணவர்களுக்கு […]

Continue reading …

“சகுந்தலம்” ரிலீஸ் தேதி மாற்றம்!

Comments Off on “சகுந்தலம்” ரிலீஸ் தேதி மாற்றம்!

பிப்ரவரி 17ம் தேதி சமந்தா நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு இருந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்திலுள்ள “ஷகுந்தலம்“ எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பின்னர் […]

Continue reading …

விஜய் படத்தின் வசூல் 300 கோடியா?

Comments Off on விஜய் படத்தின் வசூல் 300 கோடியா?

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “வாரிசு” திரைப்படம் உலகம் முழுதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. “வாரிசு” திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14ம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான “வாரிசு” திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பெரிய அளவில் சாதித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. நேற்று “வாரிசு” திரைப்படம் உலகளவில் 300 கோடி […]

Continue reading …

இயக்குனருக்கு நடந்த சோகம்!

Comments Off on இயக்குனருக்கு நடந்த சோகம்!

விஜய் நடிக்க இருந்த “முரசு” பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாக இருந்தது. 2006ம் ஆண்டு விஜய் “திருப்பாச்சி” மற்றும் “சிவகாசி” என இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குனரும் பேரரசுதான். அப்போது “சிவகாசி” திரைப்படத்தின் போதே பேரரசுவின் தம்பி முத்துவடுகு விஜய்க்கு “முரசு” என்ற கதையை சொல்லியுள்ளார். அக்கதையும் விஜய்க்கு பிடிக்கவே படம் தொடங்கும் சூழ்நிலையில் திடீரென கைவிடப்பட்டுள்ளது. இதை சமீபத்தில் முத்துவடுகு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் படம் ஏன் கைவிடப்பட்டது என்பது […]

Continue reading …

பிரபல நடிகரின் வேண்டுகோள்!

Comments Off on பிரபல நடிகரின் வேண்டுகோள்!

தன்னை பான் இந்திய நடிகர் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் மற்றும் அவர் மும்பைகார், மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், “என்னை ஒரு நடிகர் என்று மட்டும் கூறினால் போதும், பான் இந்திய நடிகர் என்று கூறுவது எனக்கு […]

Continue reading …

துருக்கி நாட்டு தூதர் இந்தியாவிற்கு புகழாரம்!

Comments Off on துருக்கி நாட்டு தூதர் இந்தியாவிற்கு புகழாரம்!

துருக்கி நாட்டு தூதர் இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாம் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன. அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன. இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் […]

Continue reading …

துருக்கி நிலநடுக்கத்திற்கு வைரமுத்துவின் கவிதை..!

Comments Off on துருக்கி நிலநடுக்கத்திற்கு வைரமுத்துவின் கவிதை..!

பூகம்பம் காரணமாக துருக்கியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன் […]

Continue reading …