
இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்கர் விருதுக்கான 2 தகுதிகளைப் “காந்தாரா” திரைப்படம் பெற்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். “கேஜிஎப்- 1 & 2 ஆகிய திரைப்படங்களுக்குப் பின் கன்னட சினிமா மீது சினிமா மீது உலக ரசிகர்கள் பார்வை குவிந்தது. பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் “காந்தாரா.” படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலை […]
Continue reading …
நடிகை நயன்தாரா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் கமல்ஹாசன் காலில் விழுந்து ஆசி பெற்றேன் என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “கோல்டு.” இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்தரன். இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது டுவிட்டரில், “சினிமாவின் எவரெஸ்ட் சிகரமான உலக நாயகன் கமல்ஹாசனை முதல்முறையாக சந்தித்தேன். அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன், அவரது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக்கை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த உத்தரவு […]
Continue reading …
ரூ.20 கோடி வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி, சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 டோக்கன் தினசரி 20,000 எண்ணிக்கையில் ஆன்லைனில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் […]
Continue reading …
பிறந்து 18 மாதங்களே ஆன மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உடல் உறுப்புகள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டதால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து குழந்தை கோமா நிலைக்குச் சென்றது. அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டதையடுத்து பெற்றோரின் அனுமதியுடன் அந்த குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் […]
Continue reading …
நாளை சென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தான் போட்டிக்காக ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய கைலாசத்திலிருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதி இல்லை. மத்திய கைலாஷ், காந்தி மண்டபத்திலிருந்து வருவோர் எல்பி சாலை மற்றும் சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம். மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும் என்று […]
Continue reading …
ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அமேசான் நிறுவனத்தின் பங்கு இறங்கியதால் அந்நிறுவனத்திற்கு நஷ்டம் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 18,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்த தகவல் காரணமாக நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் இறங்கியது. இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது இந்திய மதிப்பில் சுமார் 5000 கோடி என்றும் […]
Continue reading …
மத்திய வருவாய் புலனாய்வால் செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் […]
Continue reading …
இன்று போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் முடிந்து விட்டதை அடுத்து தங்கள் பணியை நீட்டிக்க வேண்டும் என்று 2300க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, “இன்று மாலை 3 மணிக்கு […]
Continue reading …
நடிகர் சந்தானம் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தானத்தை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரிரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது […]
Continue reading …