
காகேசியின் ஷெப்பர்டு என்ற இன நாய் ஒன்றை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூபாய் 20 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணக்காரர்கள் பெரும்பாலும் தங்களுக்கு பிடித்த செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமும், பிரியமும் வைத்திருப்பார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கில் மற்றும் லட்சக்கணக்கில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு நாய் வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 கோடிக்கு காகேசியின் ஷெப்பர்டு இன […]
Continue reading …
உலகநாயகன் கமலஹாசன் மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதன் நினைவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அனுமதி கோரி உள்ளோம், விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். […]
Continue reading …
சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக வாதம் செய்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடைபெற்று வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று வாதம் செய்தது. இதில், “அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது. அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தால் கூட நான் தான் வெற்றி பெறுவேன். ஒற்றை தலைமையில் அமர்வேன், தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சியை […]
Continue reading …
புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான், இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது, அதனால் தான் தமிழ்நாடு […]
Continue reading …
டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான கருத்துக்களை பெற்றது. பழைய திரைப்படங்களில் அஜீத் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேடுள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரெயிலர் உறுதி செய்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி […]
Continue reading …
கிருத்திகா உதயநிதி “காதலிக்க அஞ்சக் கூடாது..’ என தனது மகனின் புகைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனரும், அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், “காதலிக்கவோ, காதலை வெளியில் சொல்லவோ அஞ்சக்கூடாது. அது இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதியின் மகன் இன்பநிதி புகைப்படம் ஒன்றை சர்ச்சைக்குரிய வகையில் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வரும் நிலையில் அப்புகைப்படம் குறித்து தான் கிருத்திகா […]
Continue reading …
போக்குவரத்து போலீசார் கடந்த 2020 மற்றும் 2021ம்- ஆண்டுகளை காட்டிலும் 2022ம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், சாலையில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. சமீபத்தில் தமிழகத்திலும் இது அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதையும் மீறி சிலர் பயணித்து, விபத்தில் சிக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுகுறித்து அறிக்கையை தமிழக போக்குவரத்து காவல்துறை […]
Continue reading …
பஜ்ரங் தள் அமைப்பினர் குஜராத்தில் ‘பதான்’ திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு அல்லாமல் திரையரங்கில் வைத்திருந்த பேனர்களை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உட்பட பலரும் நடித்து தயாராகியுள்ள படம் ‘பதான்’. படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியானது. அதில் ’பேஷரம் ரங்’ என்ற பாடலில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடையில் வந்ததற்கு இந்து அமைப்புகள் கண்டனம் […]
Continue reading …
ஆளுநர் ஆர்.என்.ரவியை “ஆளுநராக செயல்படுங்க.. பாஜக தலைவராக அல்ல!” என டி.ஆர்.பாலு அட்வைஸ் செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதை தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருவது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் […]
Continue reading …
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு 5 லட்சமாக அதிகரிக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்கள் […]
Continue reading …