
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதோடு சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் தயாரிப்பில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உள்ளூர் மருந்தாளுனர்களின் ஆலோசனையின் […]
Continue reading …
நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கூறியது அனைத்தும் முழுக்க முழுக்க பொய் என மதுரை விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக நடிகர் சித்தார்த் தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மாஸ்க் மற்றும் ஐடி கார்டு காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான் என்று விமான நிலையத்தின் மூத்த அதிகாரி கூறினார். மேலும் சித்தார்த்தின் பெற்றோரை சோதனை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த பெண் தான் என்றும் […]
Continue reading …
நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இந்தியர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட ஏற்படும் வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறிவிடுகிறது. அப்படியாக விமானத்தில் நடந்த ஒரு கை கலப்பு சண்டைதான் தற்போது வைரலாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ஹாங்காங் சென்ற ‘தாய் ஸ்மைல் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சில இந்தியர்களும் பயணித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு இடையே இருக்கை தொடர்பாக ஏதோ வாக்குவாதம் எழுந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து […]
Continue reading …
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா பகுதியில் வசிக்கும் ஜெய்ராம் நாயக்(20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்ததோடு பலாத்காரமும் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள் சேர்ந்து ஜெய்ராமுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். இது தெரிந்து ஜெய்ராம் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக உள்ளதாக புகார் கூறியுள்ளனர். சிறுமி பள்ளி செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு […]
Continue reading …
உலகளவில் பணக்காரர்களின் டாப் 10 பட்டியிலில் இருக்கும் அதானி தனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பணக்கார் கவுதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக உள்ளார். இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 137.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் பெரும் செல்வந்தராகவும் […]
Continue reading …
டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டைக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. இவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இரண்டாவது மகள் ஆகியோருக்கு சில ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. முகேஷ் அம்பானி- மற்றும் நிதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும், வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும் இன்று ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்.” கன்னட சினிமாவில் வெற்றிப்பெற்ற “கேஜிஎப்” போன்று இத்திரைப்படமும், கோலார் தங்க வயல் உருவாகக் காரணமான தமிழர்களின் வரலாற்றைப் படத்தில் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவிலுள்ள கடப்பாவில் தொடங்கப்பட்டது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் புதிய தகவலை […]
Continue reading …
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டரில், “நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணை அரசாணை அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, வரி வசூல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கப்படும். மேலும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் […]
Continue reading …
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில் கோயம்பேடு முதல் மாதம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதை அமைக்க ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சென்னை மெட்ரோ […]
Continue reading …
அடையார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் 9 அடுக்கு வணிகவளாகம் கட்டப்படப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இச்செய்தியை அடையார் பகுதியிலுள்ள மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னையின் பழமையான பணிமனைகளில் ஒன்றான அடையார் பணிமனையில் வணிக வளாகம் அமைக்கக்கூடாது என்று தெரிவித்தனர். சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. சென்னையிலுள்ள அடையாறு பேருந்து பணிமனையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 9 மாடி வளாகம் அமைக்கப்படப் போவதாக வெளியாகி உள்ள தகவல் […]
Continue reading …