Home » Entries posted by Shankar U (Page 374)
Entries posted by Shankar

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு வேண்டுகோள்!

Comments Off on உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு வேண்டுகோள்!

உலக சுகாதார அமைப்பு சீனாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா குறித்த தரவுகளை பகிறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உலக நாடுகள் பலவும் சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால் பீதியடைந்துள்ளது. சீனா பயணிகளுக்கு உலக நாடுகள் பலவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் சீனாவிலோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சீனாவில் கொரோனா பரவல் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது உலக நாடுகளை […]

Continue reading …

கடைசி லாட்டரிக்கு அடித்த ஜாக்பாட் ரூ.33 கோடி!

Comments Off on கடைசி லாட்டரிக்கு அடித்த ஜாக்பாட் ரூ.33 கோடி!

கடையில் கடைசியாக இருந்த லாட்டரி சீட்டுக்கு ரூபாய் முப்பத்தி மூன்று கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ச்சியாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் லாட்டரி சீட்டு வாங்க கடைக்கு சென்றபோது கடையில் கடைசியாக இரண்டே இரண்டு லாட்டரி சீட்டு மற்றும் இருந்துள்ளது. அந்த இரண்டு லாட்டரிச் சீட்டுக்களையும் அவர் வாங்கியுள்ளார். அவர் வீட்டுக்கு வந்த நிலையில் சில மணி நேரத்தில் […]

Continue reading …

பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

Comments Off on பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் என எல்லோரும் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் வருகை தற்போது அதிகரிப்பால் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இதை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் பலரும் பாதிக்கப்பட்டு வருவதும் இதனால் பலர் தவறான முடிவுக்கு வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசிக்கும் மணிகண்டன் என்ற கட்டிடத்தொழிலாளி சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் […]

Continue reading …

தமன்னாவின் மகிழ்ச்சி!

Comments Off on தமன்னாவின் மகிழ்ச்சி!

நடிகை தமன்னா தனது திரைப்பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், திரையுலகில் தான் சாதிக்க விரும்பியதை சாதித்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் நாம் நினைத்தது எல்லாம் உடனுக்குடன் நடந்துவிடாது எதற்கும் கால நேரம் என்று வரவேண்டும், அது வரை நாம் காத்திருக்க வேண்டும். அது போல தான் சினிமாவில் எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்றாலும் போக போக நான் நடித்த கதாபாத்திரங்களில் […]

Continue reading …

புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய கட்டுப்பாடு!

Comments Off on புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய கட்டுப்பாடு!

மாவட்ட போலீசார் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல புதிய உத்தரவுகள் விதித்துள்ளனர். நாளை முதல் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போக்குவரத்துக்கு தடை என போலீசார் அறிவித்திருந்தனர். தற்போது சென்னையில், நாளை மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளனர் போலீசார். அதன்படி, இந்த அறிவிப்பை மீறி யாரேனும் நாளை மாலை 6 மணிக்கு மேல் 2க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் […]

Continue reading …

முன்னாள் கிரிக்கெட் வீரரின் ஆவேசம்!

Comments Off on முன்னாள் கிரிக்கெட் வீரரின் ஆவேசம்!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா “நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா?” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதையடுத்து இப்போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரமீஸ் ராஜா, “பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்றும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியா கூறுவதை பார்க்கும் போது நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா? என்றுதான் கேள்வி […]

Continue reading …

பிரதமரின் தாயாரின் இறப்புக்கு பிரமுகர்களின் இரங்கல்!

Comments Off on பிரதமரின் தாயாரின் இறப்புக்கு பிரமுகர்களின் இரங்கல்!

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று குஜராத்தில் நடைபெற்றது. குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதர மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், […]

Continue reading …

இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Comments Off on இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மட்டுமே நியாயமான பதவிகள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே செயற்கையான பதவிகளை உருவாக்கினார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை இணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை செயற்கையாக […]

Continue reading …

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

Comments Off on இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

சென்னையில் 4 வது நாளாக தமிழ் நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரிரியர்கள் கூறினர். தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பேச்சு வார்த்தையின் போது […]

Continue reading …

உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி!

Comments Off on உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி!
உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர். வரலாறு காணாத கடும் பனிபொழிவால் அமெரிக்க மாகாணங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. பல மாகாணங்களில் விமான சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனிமூடி கிடப்பதால் வாகனங்கள் மூலமாகவும் பயணிக்க முடியாமல் மக்கள் சிக்கியுள்ளனர். சில பகுதிகளில் கடும் பனியால் […]

Continue reading …