
முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் “ஒருநாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை” என்று கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சென்னையில் மழை நீர் வடிகால் பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதனால் ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி அனைத்து […]
Continue reading …
அக்டோபர் 15ம் தேதி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில், “ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது. இது இந்தி படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தி கற்க வேண்டும் என்ற […]
Continue reading …
பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் “சிறார் திரைப்பட விழா திட்டம்” என் முறையில் இன்று திரையிடப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்படப்படுகிறது. மாதம்தோறும் இரண்டாவது வாரம் இத்திரைப்படங்கள் திரையிடபடுகின்றன. அவ்வகையில் இந்த வாரம் பள்ளி […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்து “ஓசி” என்று பேசியது தவறுதான் என்று வருந்தியுள்ளார். திமுக அமைச்சர்கள் பலரும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இது மக்களிடையேயும் சில அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்திருந்தார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி மற்றும் துரைமுருகன் உட்பட […]
Continue reading …
ரூ.50 கட்டணத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதி ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இருந்தது. தற்போது மெட்ரோ ரயிலில் ரூபாய் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதியை பயணிகளுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். 100 ரூபாய் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ […]
Continue reading …
கர்நாடக கல்வியமைச்சர் நாகேஷ் கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கான தடை தொடரும் என்று கூறியுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்து அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் எதை பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் செய்தியாளர்களிடம், “கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஐகோர்ட்டு விதித்த தடை தொடரும். […]
Continue reading …
காணாமல் போன 12 பெண்களின் நிலை என்னவென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பணம், செல்வம் குவிய வேண்டுமென்று பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கொண்ட […]
Continue reading …
பெங்களூரில் பேருந்து கண்டக்டர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 10 ரூபாய் நாணயத்தை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் உள்ள கிராமங்களில் வாங்க மறுப்பதாகவும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பெரும்பாலான பேருந்து கண்டக்டர்கள் […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! என்று விமர்சித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜகவுக்காகப் போட்டியிட்ட நிலையில், இதே தொகுதியில், செந்தில் பாலாஜியும் போட்டியிட்டார். அப்போது, செந்தில்பாலாஜிவை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உட்பட்ட பல பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாஜக […]
Continue reading …
சைபர் கிரைம் போலீசார் யோ-யோ ஆப்பில் சிக்கிய இளம் பெண்கள் பற்றிய விபரங்களை எடுத்துரைத்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் அழகான ஆண்கள் படத்தை வைத்து பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டிய அழகுராஜாவை போலீசார் பிடித்துள்ளனர். அழகிய ஆண்கள் படங்களை புரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டு பணம் பறித்த நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர். யோ-யோ என்ற ஆப் […]
Continue reading …